» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரதமர் மோடியை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்: எலான் மஸ்க்

வியாழன் 11, ஏப்ரல் 2024 11:27:43 AM (IST)



"இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன்" என்று எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரும், 'எக்ஸ்' வலைத்தள நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் வருகிற 22-ந் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருகையின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என்றும், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீட்டு திட்டங்களை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அவரை எலான் மஸ்க் சந்தித்து பேசியதும், அப்போது அவரிடம் 2024-ல் தான் இந்தியா வருவதாக எலான் மஸ்க் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. .இந்த சந்திப்பு குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் வலை தளப் பக்கத்தில், "இந்தியாவில் பிரதமர் மோடியுடனான சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory