» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியா செய்த அட்டூழியங்களை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது : ஜோ பைடன் குற்றச்சாட்டு

வியாழன் 22, செப்டம்பர் 2022 4:55:29 PM (IST)

ரஷியா செய்த அட்டூழியங்களை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டி பேசியுள்ளார். 

நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல் நடத்திய ரஷிய அதிபர் விளாதிமீர் புதீன், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கொள்கைகளை சிறிதும் வெட்கமின்றி மீறியுள்ளதாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் கடுமையாக குற்றம்சாட்டி பேசினார். 

 "ஒரு தனிப்பட்ட நபரால் ஏற்படுத்தப்பட்ட தேவையற்ற போர் இது. ரஷியாவை யாரும் அச்சுறுத்தவில்லை. ரஷியாதான் இந்த போரை நாடியிருக்கிறது. "​​ஐ.நா. பொதுச் சபையின் அடிப்படையான நிலையான மற்றும் நியாயமான, விதிகள் அடிப்படையிலான ஒழுங்குமுறையானது, தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்திற்காக அதை சிதைக்க விரும்புபவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகிறது. 

ஐக்கிய நாடுகளின் சாசனம் உலகின் ஜனநாயக நாடுகளால் மட்டும் கையெழுத்திடப்படவில்லை. இது குடிமக்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 12-க்கும் மேற்பட்ட நாடுகள், பல்வேறு வரலாறுகள் மற்றும் சித்தாந்தங்கள், கொள்கைகள் அடிப்படையில் அமைதிக்காக பணியில் ஈடுபடுவதற்கான உறுதிப்பாட்டில் உருவாக்கப்பட்டது.

ஐ.நா. பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடு அதன் அண்டை நாடு மீது படையெடுத்து, ஒரு இறையாண்மை கொண்ட அரசை உலக வரைபடத்தில் இருந்து அழிக்க முயன்று வருகிறது. ஐ.நா பொதுச் சபையின் அடிப்படைக் கொள்கைகளை ரஷியா சிறிதும் வெட்கமின்றி மீறியுள்ளது. எல்லா இறையாண்மையும் கொண்ட நாடுகளைபோல உக்ரைனுக்கும் தங்கள் நாட்டை பாதுகாத்துக் கொள்ள எல்லா உரிமையும் கொண்டுள்ளது. ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். 

மேலும், ரஷியாவின் ஆக்கிரமிப்பு, கரோனோ தொற்றுநோய் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றிலிருந்து உருவாகும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பின்மையை நிவர்த்தி செய்ய 2.9 பில்லியன் டாலர் புதிய அமெரிக்க முதலீட்டையும் அறிவித்த பைடன், உக்ரைனுக்கு இதுவரை உணவுப் பாதுகாப்பின்மையை நிவர்த்தி செய்ய ஏற்கனவே அமெரிக்கா அளித்த உறுதியளிப்பின்படி 6.9 பில்லியன் டாலர்களுக்கு மேல் பாதுகாப்பு உதவி மற்றும் நேரடி பொருளாதார ஆதரவை அமெரிக்கா வழங்கியுள்ளதாக பைடன் கூறினார். 

ஒரு நாட்டை தங்கள் சுய விருப்பத்திற்காக யாரும் கைப்பற்றிட முடியாது. ரஷியா மீதான தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.  ரஷியா செய்த அட்டூழியங்களை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளுக்கு அணு ஆயுத எச்சரிக்கையை விடுத்திருக்கிறது ரஷியா. "ரஷியாவின் போரே உணவுப் பாதுகாப்பின்மையை மோசமாக்குகிறது. ரஷியாவால் மட்டுமே அதை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்று ஜோ பைடன் கூறினார்.


மக்கள் கருத்து

sgrdgfredfSep 23, 2022 - 08:34:16 PM | Posted IP 162.1*****

vithi valiyathu. naa unga kannu munnadi than itha lam paaka poren

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory