» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இளம்பெண் மரணம் எதிரொலி; ஹிஜாபுக்கு எதிராக பெண்களின் போராட்டம் தீவிரம்: ஈரானில் பதற்றம்
வியாழன் 22, செப்டம்பர் 2022 10:43:09 AM (IST)

ஈரானில் ஹிஜாப் அணியாததால் இளம் பெண் ஒருவர் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்நாட்டில் ஹிஜாபுக்கு எதிராக பெண்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
ஈரானின் வட-மேற்கு நகரான சாகேஸ் பகுதியில், 22 வயது குர்தீஷ் இன பெண் அமினி என்பவர் தெஹ்ரானில், ஹிஜாப் அணியாமல் தனது சகோதரருடன் சென்ற இவர், கலாசார காவலர்களால் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, காவலர்களால் கொடூரமாகத் தாக்குதலுக்கு உள்ளாகி பலியானதாக செய்திகள் வெளியானது.
அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக காவல்துறை கூறும் நிலையில், காவலர்கள் தாக்கியதாலேயே அவர் மரணமடைந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஈரானின் பல்வேறு பகுதிகளில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று ஐந்தாவது நாளாக ஈரானில் நடைபெற்ற போராட்டத்தின் போல பல பெண்கள் தங்களது ஹிஜாபைக் கழற்றி எறிந்தனர். சிலர் ஹிஜாபை தீ வைத்துக் கொளுத்தினர். மேலும் போராட்டத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஒரு பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாகிஸ்தான் சிறையிலிருந்து 200 இந்திய மீனவர்கள் விடுதலை: மனிதாபிமான நடவடிக்கை!
சனி 3, ஜூன் 2023 12:38:25 PM (IST)

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நலமாக இருக்கிறார்: வெள்ளை மாளிகை
சனி 3, ஜூன் 2023 8:08:29 AM (IST)

சவுதி அரேபிய கட்டடக் கலைஞரை கரம்பிடித்தார் ஜோர்டன் பட்டத்து இளவரசர்!
வெள்ளி 2, ஜூன் 2023 11:33:45 AM (IST)

இந்தியா-நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரயில் தொடங்கியது!
வியாழன் 1, ஜூன் 2023 4:40:58 PM (IST)

வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் சோதனை தோல்வி
புதன் 31, மே 2023 4:38:14 PM (IST)

இந்தியாவில் இருந்து தினமும் 10 லட்சம் முட்டைகள் இறக்குமதி: இலங்கை ஒப்பந்தம்
புதன் 31, மே 2023 10:33:33 AM (IST)
