» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தாய்லாந்தில் இரவுநேர மதுபான விடுதியில் தீ விபத்து: 13 பேர் பலி; 40 பேர் படுகாயம்!
வெள்ளி 5, ஆகஸ்ட் 2022 11:17:03 AM (IST)
தாய்லாந்தில் இரவுநேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
தாய்லாந்தின் கிழக்கு மாகாணமான சோன்புரில் உள்ள மவுண்டன் பி என்கிற இரவில் இயங்கும் மதுபான விடுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், கூடம் முழுவதும் தீ சுற்றி வளைத்ததில் 4 பெண்கள், 9 ஆண்கள் உள்பட 13 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.