» செய்திகள் - விளையாட்டு » உலகம்
தைவான் கடல் பகுதியில் ஏவுகணைகளை வீசிய சீனா: உலக நாடுகள் கண்டனம்!
வியாழன் 4, ஆகஸ்ட் 2022 5:08:29 PM (IST)

தைவான் கடல் பகுதியில் சீனாவின் போர் ஒத்திகைக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தைவானை தன் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கருதிக்கொண்டு இருக்கும் நிலையில், தைவான் தனி நாடு சுதந்திரம் கோருகிறது. இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற அவைத் தலைவர் நான்சி பெலோசி, சீனாவின் எதிர்ப்பையும் மீறி தைவான் பயணம் சென்று வந்துள்ளார்.
இதையடுத்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தைவான் கடல் பகுதியில் சீனா இன்று போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. தைவானின் வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளுக்கு அருகே மொத்தம் 11 டாங்ஃபெங் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சீனா ஏவியுள்ளதாக தைவான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனாவின் போர் ஒத்திகைக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரஷியா - உக்ரைன் போரைத் தொடர்ந்து சீனா - தைவான் போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவை எச்சரிக்கும் வகையில் இன்று முதல் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை போர் ஒத்திகை நடைபெறும் என சீனா அறிவித்துள்ளது. குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உக்ரைன் போரில் கைதிகளை ஈடுபடுத்த ரஷியா முடிவு: மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 4:47:09 PM (IST)

ஆப்கானிஸ்தான் மசூதியில் தொழுகையின் போது பயங்கரம்: குண்டு வெடித்து 30 பேர் பலி!
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 10:27:04 AM (IST)

இலங்கையில் 6 தமிழ் அமைப்புகள், 316 தனி நபா்கள் மீதான தடை நீக்கம்: அரசு விளக்கம்!
புதன் 17, ஆகஸ்ட் 2022 12:33:31 PM (IST)

பாகிஸ்தானில் டேங்கர் லாரி - பேருந்து மோதி விபத்து: 20 பயணிகள் உடல் கருகி உயிரிழப்பு!
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 3:57:11 PM (IST)

சல்மான் ருஷ்டியை கொல்ல முயன்ற நபருடன் தொடர்பா? - ஈரான் விளக்கம்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 8:45:04 AM (IST)

இந்தியாவின் 75-வது சுதந்திர தின: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து
திங்கள் 15, ஆகஸ்ட் 2022 8:53:01 AM (IST)
