» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை; திருப்பி அளிக்க வேண்டும்- இலங்கை பிரதமர் உரை!
புதன் 22, ஜூன் 2022 3:35:02 PM (IST)
இந்தியாவிடம் பெற்ற கடன்களை நாம் கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும். இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை என்று நாடாளுமன்றத்தில் இலங்கை பிரதமர் தெரிவித்தார்.

இத்தகைய நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் நாம் 31 ஆயிரம் கோடி அளவுக்கு கடனாக பெற்றுள்ளோம். மேலும் கடனுதவி அளிக்க வேண்டும் என்று இந்திய தலைவர்களிடம் நாம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இந்தியாவாலும் இந்த முறையில் தொடர்ந்து உதவி அளிக்க முடியாது. அவர்கள் அளிக்கும் உதவிக்கு சில வரமுறைகள் உள்ளன. மறுபுறம் இந்தியாவிடம் பெற்ற கடன்களை நாம் கண்டிப்பாக திருப்பி செலுத்த வேண்டும். இந்தியா அளிப்பது நன்கொடை இல்லை.
எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் இலங்கை இப்போது மிகவும் கொடிய நிலைமையை எதிர்கொண்டுள்ளது. நமது பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளது. நமக்கு முன்னால் இருக்கும் மிகத்தீவிரமான பிரச்சினை இதுதான். இலங்கை பொருளாதாரம் மீட்சி அடைவதன் மூலம் இந்த பிரச்சினைகளை தீர்க்க முடியும். இதற்காக அன்னிய செலவாணி நெருக்கடியை நாம் முதலில் தீர்க்க வேண்டும்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் மதரீதியான நிகழ்வுகள் கவலை அளிக்கின்றன : அமெரிக்கா கருத்து
சனி 2, ஜூலை 2022 12:17:18 PM (IST)

அமெரிக்க வரலாற்றில் முதல்முறை: உச்சநீதிமன்ற நீதிபதியாக கறுப்பின பெண் பதவியேற்பு!
வெள்ளி 1, ஜூலை 2022 5:01:28 PM (IST)

தஞ்சை மியூசியத்தில் இருந்து காணாமல்போன தமிழ் பைபிள்: லண்டனில் கண்டுபிடிப்பு!
வெள்ளி 1, ஜூலை 2022 4:53:36 PM (IST)

பெண்கள், சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: பாப் பாடகர் கெல்லிக்கு 30 ஆண்டு சிறை!
வியாழன் 30, ஜூன் 2022 12:07:33 PM (IST)

பத்திரிகையாளர்களின் கருத்துக்காக கைது செய்யக்கூடாது: ஐ.நா. கண்டனம்
புதன் 29, ஜூன் 2022 5:57:20 PM (IST)

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக இந்தியா உள்ளிட்ட 5 நட்பு நாடுகள் உறுதிமொழி
புதன் 29, ஜூன் 2022 8:35:08 AM (IST)

தமிழன்Jun 22, 2022 - 04:41:28 PM | Posted IP 162.1*****