» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

ஞாயிறு 22, ஆகஸ்ட் 2021 9:44:43 PM (IST)



ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலையத்தில்  கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்து விட்டதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில், அங்கு ஆட்சி அமைக்க தலிபான்கள் மும்முரம் காட்டிவருகின்றனர். இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறிவருகின்றனர். குறிப்பாக, காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிவருகிறது. இதனை சமாளிக்க முடியாமல், அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் திணறி வருகின்றன. மக்களை மீட்கும் பணிகள் இந்த மாத இறுதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மீட்பு பணிக்கான கால அவகாசத்தை அமெரிக்கா நீட்டித்துள்ளது.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக 7 ஆப்கானிஸ்தானியர் பலியாகியுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஏழு ஆப்கனியர்களின் குடும்பத்தாரை எண்ணி வருந்துகிறோம்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital







Thoothukudi Business Directory