» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா தொற்றால் ஒரேநாளில் 1,348 பேர் பலி: இந்தோனேசியாவில் சோகம்!

வெள்ளி 20, ஆகஸ்ட் 2021 5:26:00 PM (IST)



இந்தோனேசியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 1,348 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டில் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 20,004 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,950,304ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 1,348 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,23,981ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 26,122 பேர் குணமடைந்தனர்.

இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,499,037ஆக உயர்ந்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி 30.75 மில்லியன் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் 56.50 பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory