» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவிடம் ரூ.22 கோடி மதிப்பிலான கலைப் பொருள்களை திரும்ப ஒப்படைக்க ஆஸி. முடிவு

வெள்ளி 30, ஜூலை 2021 10:56:47 AM (IST)



இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ. 22 கோடி மதிப்பிலான 14 கலைப்பொருள்களை இந்தியாவிடமே திரும்ப ஒப்படைக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பை ஆஸ்திரேலியாவின் தேசிய அருங்காட்சியகம் (என்ஜிஏ) வியாழக்கிழமை வெளியிட்டது. இதில் 13 கலைப்பொருள்கள் சிலைக் கடத்தல் குற்றவாளி சுபாஷ் கபூரிடமிருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியதாகும். ஒன்று மட்டும் நியூயாா்க்கைச் சோ்ந்த கலைப்பொருள் முகவா் வில்லியம் உல்ஃப் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளது.

இதுகுறித்து என்ஜிஏ இயக்குநா் நிக் மிட்ஸவிச் கூறுகையில், ‘கலைப்பொருள்களைத் திரும்ப ஒப்படைப்பது என்பது கலாசார ரீதியிலான பொறுப்பு மற்றும் உரிமையாகும். ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா அளித்துவரும் சிறந்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இந்த கலைப்பொருள்கள் ஒப்படைக்கப்படுகின்றன’ என்றாா்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதா் மன்ப்ரீத் வோரா கூறுகையில், ‘என்ஜிஏவின் முடிவு இரு நாடுகளிடையேயான சிறந்த நடப்புறவின் அடையாளமாகும். திரும்ப ஒப்படைக்கப்பட இருக்கும் கலைப் பொருள்களில் வெண்கல சிலைகள், கற்சிலைகள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.’ அவற்றில் சில 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றாா்.

இந்த கலைப்பொருள்களை 1989-2009 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் என்ஜிஏ அருங்காட்சியகம் வாங்கியுள்ளது. பல்வேறு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்பதால், இந்த கலைப்பொருள்கள் இந்தியாவிடம் முழுமையாக ஒப்படைக்க இரண்டு மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory