» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அதிக பாரம் தாங்காமல் ஜீப் ஆற்றில் கவிழ்ந்து 9 பேர் உயிரிழப்பு : பாகிஸ்தானில் சோகம்!!
திங்கள் 31, மே 2021 5:35:10 PM (IST)
பாகிஸ்தானில் யார்க்ஹூன் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் சித்ரல் நகரத்திலிருந்து யர்கூன் பள்ளத்தாக்கு நோக்கி வந்து கொண்ருந்த ஜீப் ஒன்று ஓனாச் பாலத்தில் வந்தபோது, வாகனத்தில் அதிக சுமை இருந்ததன் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஜீப் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஜீப்பில் ஓட்டநர் உட்பட 11 பேர் இருந்துள்ளனர். இதுவரை 9பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் பாதுகாப்பாக நீந்தி கரைக்கு வந்து சேர்ந்தார். விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.