» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம்: தேர்தல் தோல்வி குறித்து கேஜரிவால் கருத்து
சனி 8, பிப்ரவரி 2025 9:16:15 PM (IST)
மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என டெல்லி பேரவைத் தேர்தல் குறித்து ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதிகாரத்திற்காக அரசியலில் ஈடுபடவில்லை. அரசியலை மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு வழிமுறையாக பார்க்கிறோம். ஆட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, மக்களின் இன்பத்திலும், துன்பத்திலும், அவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றுமென நம்புகிறேன். தேர்தல் முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியுடன் செயல்பட்டதற்காக கேஜரிவால் பாராட்டினார்.
இந்த தேர்தலில் மிகுந்த கடின உழைப்பு மற்றும் உறுதியுடன் போராடிய அனைத்து ஆம் ஆத்மி கட்சியினரையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை 3,182 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பர்வேஷ் வெர்மா வீழ்த்தியுள்ளார்.
எனவே, டெல்லியில் பாஜக தலைமையிலான ஆட்சியில், பர்வேஷ் வெர்மா முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தோல்வியடைந்திருப்பது, ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தற்காப்புக் கலை பயிற்சியாளர் ஹுசைனி மறைவு: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல்!,
செவ்வாய் 25, மார்ச் 2025 5:07:23 PM (IST)

வடமாநில எம்.பி.க்களுக்கு ஏன் ஆங்கிலம் பேச தெரிவதில்லை? கலாநிதி வீராசாமி கேள்வி!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:01:17 PM (IST)

நூறு நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்தம் குறித்து திமுக நோட்டீஸ்!
செவ்வாய் 25, மார்ச் 2025 11:50:45 AM (IST)

பட்டியாலா சிறையிலிருந்து பி.ஆர் பாண்டியன் விடுவிப்பு: 5 நாள் சிறைவாசம் முடிந்தது!
திங்கள் 24, மார்ச் 2025 7:53:30 PM (IST)

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விருப்பமா? 10 நாட்களில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் அவகாசம்!
திங்கள் 24, மார்ச் 2025 5:43:37 PM (IST)

ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் கல்வியை எடுத்துக் கொண்டால் இந்தியா அழிந்துவிடும்: ராகுல் காந்தி
திங்கள் 24, மார்ச் 2025 5:17:59 PM (IST)

கந்தசாமிFeb 9, 2025 - 10:47:02 AM | Posted IP 162.1*****