» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தமிழ்நாட்டில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும்: மத்திய அரசு தகவல்
திங்கள் 3, பிப்ரவரி 2025 5:39:33 PM (IST)
தமிழ்நாட்டில் உதான் திட்டத்தின் கீழ் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
மாநிலங்களுக்குள்ளாக மண்டலங்களை விமான சேவை மூலம் இணைக்க வகை செய்யும் உடான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள விமான நிலையங்கள் எவை? அதற்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளன? எப்போது அவை பயன்பாட்டுக்கு வரும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய விமான போக்குவரத்து இணையமைச்சர் முரளிதர் பதில் அளித்தார். அதில் ,உடான் திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவுபெற்றது; நெய்வேலி மற்றும் வேலூருக்கு விரைவில் விமான சேவை தொடங்கும். விமான சேவை மூலம் சிறுநகரங்களை இணைக்கும் உடான் திட்டத்தின் கீழ் சேலம், வேலூர், நெய்வேலி, தஞ்சை, ராமநாதபுரம் ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த ஊர்களில் விமான நிலையங்களை அமைக்கும் பணியும் மேம்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. இதில் சேலத்திலிருந்து விமான சேவை தொடங்கப்பட்டுவிட்டது. நெய்வேலி மற்றும் வேலூரில் விமான நிலையப் பணிகள் நிறைவடைந்து அது தொடர்பான லைசென்ஸ்களைப் பெறும் பணிகள் நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் மேலும் 5 விமான நிலையங்கள்
தமிழ்நாட்டில் உதான் திட்டத்தின் கீழ் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர், உளுந்தூர்பேட்டையில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் உட்பட 5 இடங்களில் பயன்படுத்தப்படாமல் உள்ள விமான ஓடுபாதைகளை சீர்படுத்தி விமான நிலையமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5 விமான ஓடுபாதைகளை சீர்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏலம்விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கத் தேவையான இடத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. தஞ்சாவூரில் விமான நிலைய அணுகு சாலைக்கான இடம் விமான நிலைய ஆணையத்தின் வசம் வந்ததும் கட்டட பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 உலகக் கோப்பை 3-வது முறையாக சாம்பியன்: வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 9, மார்ச் 2026 8:29:49 AM (IST)

மேற்கு வங்கத்தில் ஜனாதிபதிக்கு அவமரியாதை : பிரதமர் மோடி கண்டனம்; மம்தா விளக்கம்
ஞாயிறு 8, மார்ச் 2026 8:31:09 PM (IST)

ஈரான் கப்பல் மூழ்கடிப்பு: மனிதாபிமான அடிப்படையில் உதவினோம் - அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
சனி 7, மார்ச் 2026 4:14:06 PM (IST)

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு: கட்டுப்பாடு மீண்டும் அமல்
சனி 7, மார்ச் 2026 11:21:45 AM (IST)

இந்தியா எண்ணெய் வாங்க அனுமதிக்க அமெரிக்கா யார்? - மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்குதல்!
வெள்ளி 6, மார்ச் 2026 12:42:42 PM (IST)
ஈரான் போர்க்கப்பல் மீதான தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மவுனம் ஏன்? - ராகுல் காந்தி கடும் கேள்வி!
வியாழன் 5, மார்ச் 2026 4:08:11 PM (IST)







