» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
வயநாட்டில் 4 நாளுக்கு பிறகு 4 பேர் உயிருடன் மீட்பு: உறவினர்கள் மகிழ்ச்சி
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 5:25:27 PM (IST)

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் 4 நாட்களுக்கு பிறகு 4 பேரை ராணுவ வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, அட்டமலை உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பல இடங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மீட்பு பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் படையுடன் ராணுவ வீரர்களும் ஈடுபட்டு உள்ளனர். சூரல்மலையில் இருந்து 3 கி.மீ., தூரத்தில் உள்ள படவெட்டி குன்னு என்ற இடத்தில், வசித்து வந்த 4 பேரை காணவில்லை என அவர்களது உறவினர்கள் ராணுவத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து இலகு ரக ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் வசித்த வீட்டிற்கு சென்று தேடினர். அப்போது, இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் சேற்றில் சிக்கிக் கொண்டு காயத்துடன் உயிருக்கு போராடியது தெரியவந்தது. அவர்களை மீட்ட ராணுவ வீரர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நிலச்சரிவு ஏற்பட்டு 4 நாட்களுக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டது உறவினர்கள் மத்தியில் மகிழ்ச்சி அளித்து உள்ளது. இதனிடையே, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்து உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையக் கூடாது: பிரதமருக்கு, ஜெகன் மோகன் கடிதம்
சனி 22, மார்ச் 2025 12:52:18 PM (IST)

செயலற்ற மொபைல் எண்களின் யுபிஐ சேவை ஏப். 1 முதல் நிறுத்தம்: என்பிசிஐ அறிவிப்பு!
சனி 22, மார்ச் 2025 12:11:56 PM (IST)

தங்கள் ஊழலை மறைக்கவே மொழி பிரச்சினையை கிளப்புகிறார்கள் : தி.மு.க. மீது அமித்ஷா தாக்கு
சனி 22, மார்ச் 2025 8:44:22 AM (IST)

உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது!
சனி 22, மார்ச் 2025 8:40:41 AM (IST)

சூதாட்ட செயலி விளம்பரம்: பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா உள்பட 25 பேர் மீது வழக்கு
வெள்ளி 21, மார்ச் 2025 11:37:12 AM (IST)

கொச்சி விமான நிலையத்தில் ரூ.4.5 கோடி கஞ்சா பறிமுதல்: மாடல் அழகி உள்பட 2 பெண்கள் கைது!
வியாழன் 20, மார்ச் 2025 7:44:02 PM (IST)
