» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போதை, வன்முறை பாடல்களுக்கு தடை: ரேடியோ சேனல்களுக்கு மத்திய அரசு உத்தரவு!

வெள்ளி 2, டிசம்பர் 2022 5:13:52 PM (IST)

போதைப்பழக்கம், வன்முறையை ஊக்கப்படுத்தும் பாடல்களை ரேடியோ நிலையங்கள் ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்து உள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரேடியோ நிலையங்கள் கிராண்ட் ஆப் பர்மிசன் ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர் கிராண்ட் ஆப் பர்மிசன் ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் கண்டிப்பாக செயல்படவேண்டும். இந்த ஒப்பந்தங்களின்படி வன்முறை இடம்பெறும் எந்தவொரு விஷயத்தையும் ரேடியோவில் ஒலிபரப்பக் கூடாது. 

இதை மீறினால் அந்த ரேடியோ நிலையங்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளது. சில ரேடியோ சேனல்கள் மது, போதைப் பொருள், ஆயுதங்கள், கும்பல் மற்றும் துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தும் பாடல்களை ஒலிபரப்பு செய்வதை தொலைத்தொடர்பு அமைச்சகம் கண்டறிந்ததை அடுத்து இந்த அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்Dec 5, 2022 - 03:21:18 PM | Posted IP 162.1*****

ஆன்லைன் சூதாட்டத்தை தடை பண்ண சொன்னா இதுல தடை பண்ணுறாங்க , அப்போ ஒயின் ஷாப் என்றால் கண்டுக்கமாட்டாங்க . என்னடா இது எல்லாம் பிசினஸ் அரசியல்வாதிகளே காரணம்.

அப்போDec 3, 2022 - 04:43:45 PM | Posted IP 162.1*****

டிவில போடலாமா ஆபீசர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory