» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெலங்கானாவில் திருநங்கைகள் இருவர் அரசு மருத்துவர்களாக நியமனம்!

புதன் 30, நவம்பர் 2022 11:48:22 AM (IST)

தெலங்கானா மாநிலத்தில் இரு திருநங்கைகள் அரசு டாக்டர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பிராச்சி ராதோர் மற்றும் ருத் ஜான்பால் கொய்யலா ஆகிய இரு திருநங்கைகள், ஐதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அரசு டாக்டரகளாக கடந்த வாரம் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து கம்மம் பகுதியை சேர்ந்த டாக்டர். ருத் ஜான்பால் கொய்யலா கூறும்போது, "நான் கடந்த 2018-ல் ஹைதராபாத் மல்லா ரெட்டி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தேன். ஆனால், திருநங்கை என்பதால், சுமார் 15-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நடந்த பணிக்கான நேர்காணலில் திருப்பி அனுப்பப்பட்டேன். ஆனால், ஜெனரல் பிரிவில் நான் தற்போது அரசு டாக்டராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.

பிராச்சி ராதோர் கூறுகையில், "அடிலாபாத்தை சேர்ந்த நான், ரிம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தேன். அதன் பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றினேன். நான் திருநங்கை என்பதால், அந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வர தயங்குவார்கள் என்று கூறி, பணியிலிருந்து நீக்கிவிட்டனர்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory