» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தெலங்கானாவில் திருநங்கைகள் இருவர் அரசு மருத்துவர்களாக நியமனம்!
புதன் 30, நவம்பர் 2022 11:48:22 AM (IST)
தெலங்கானா மாநிலத்தில் இரு திருநங்கைகள் அரசு டாக்டர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.
தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பிராச்சி ராதோர் மற்றும் ருத் ஜான்பால் கொய்யலா ஆகிய இரு திருநங்கைகள், ஐதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் அரசு டாக்டரகளாக கடந்த வாரம் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து கம்மம் பகுதியை சேர்ந்த டாக்டர். ருத் ஜான்பால் கொய்யலா கூறும்போது, "நான் கடந்த 2018-ல் ஹைதராபாத் மல்லா ரெட்டி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்தேன். ஆனால், திருநங்கை என்பதால், சுமார் 15-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் நடந்த பணிக்கான நேர்காணலில் திருப்பி அனுப்பப்பட்டேன். ஆனால், ஜெனரல் பிரிவில் நான் தற்போது அரசு டாக்டராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது" என்றார்.
பிராச்சி ராதோர் கூறுகையில், "அடிலாபாத்தை சேர்ந்த நான், ரிம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தேன். அதன் பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றினேன். நான் திருநங்கை என்பதால், அந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வர தயங்குவார்கள் என்று கூறி, பணியிலிருந்து நீக்கிவிட்டனர்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டிவி, செல்போன் விலை குறைய வாய்ப்பு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
புதன் 1, பிப்ரவரி 2023 3:02:37 PM (IST)

இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது : பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் உரை!
புதன் 1, பிப்ரவரி 2023 11:21:07 AM (IST)

பாலியல் பலாத்கார வழக்கில் ஆசரம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 31, ஜனவரி 2023 5:08:58 PM (IST)

ஆந்திராவின் தலைநகர் விசாகப்பட்டினம் : முதலமைச்சர் ஜெகன் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 31, ஜனவரி 2023 3:44:25 PM (IST)

திருவள்ளுவர், ஆதிசங்கரர் வழியில் இந்தியா செயல்பட்டு வருகிறது : குடியரசு தலைவர்
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:48:12 AM (IST)

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதைவிட மரணம் மேலானது: நிதீஷ் குமாா் பேட்டி!
செவ்வாய் 31, ஜனவரி 2023 11:35:45 AM (IST)
