» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை கணினி, டிவிட்டரில் மட்டுமே இருக்கிறது: குலாம் நபி ஆசாத்

ஞாயிறு 4, செப்டம்பர் 2022 8:01:47 PM (IST)

காங்கிரஸ் கட்சியை களத்தில் எங்கும் காண முடியவில்லை. கணினி, டிவிட்டரில் மட்டுமே இருக்கிறது கட்சியின் அணுகுமுறை என குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார். 

காங்கிரஸின் மூத்த தலைவா்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். மேலும், இது தொடா்பாக கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு அவா் எழுதிய கடிதத்தில், கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அவர் பாஜகவில் இணையப் போவதில்லை என்றும் இன்னும் சில நாள்களில் புதிய கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குலாம் நபி ஆசாத் பேசியதாவது:  காங்கிரஸ் கட்சியை களத்தில் எங்கும் காண முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை கணினி, டிவிட்டரில் மட்டுமே இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்களே எனது கட்சியின் பெயரையும் கொடியையும் தீர்மானிப்பார்கள். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் எனது கட்சி கவனம் செலுத்தும். 


மக்கள் கருத்து

HANDSep 8, 2022 - 04:22:52 PM | Posted IP 162.1*****

காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல் , அதிலிருந்து வெளியேறியது அவருக்கு நல்லதுதான். ஆனால் இவர் தமிழ்நாட்டில் உள்ள P.சிதம்பரம் போல பதவி சுகம் கண்ட ஒரு சுயநலவாதி.

KalkiSep 6, 2022 - 03:10:50 PM | Posted IP 162.1*****

NALLAA PATHAVI SUHAM ANUPAVITHUVITTU..... BEST PARLIMENTARIAN KIDAIKUMMPOTHEY THERIUM...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory