» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை கணினி, டிவிட்டரில் மட்டுமே இருக்கிறது: குலாம் நபி ஆசாத்
ஞாயிறு 4, செப்டம்பர் 2022 8:01:47 PM (IST)
காங்கிரஸ் கட்சியை களத்தில் எங்கும் காண முடியவில்லை. கணினி, டிவிட்டரில் மட்டுமே இருக்கிறது கட்சியின் அணுகுமுறை என குலாம் நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸின் மூத்த தலைவா்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். மேலும், இது தொடா்பாக கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு அவா் எழுதிய கடிதத்தில், கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவர் பாஜகவில் இணையப் போவதில்லை என்றும் இன்னும் சில நாள்களில் புதிய கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குலாம் நபி ஆசாத் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியை களத்தில் எங்கும் காண முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை கணினி, டிவிட்டரில் மட்டுமே இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்களே எனது கட்சியின் பெயரையும் கொடியையும் தீர்மானிப்பார்கள். ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் எனது கட்சி கவனம் செலுத்தும்.
மக்கள் கருத்து
KalkiSep 6, 2022 - 03:10:50 PM | Posted IP 162.1*****
NALLAA PATHAVI SUHAM ANUPAVITHUVITTU.....
BEST PARLIMENTARIAN KIDAIKUMMPOTHEY THERIUM...
HANDSep 8, 2022 - 04:22:52 PM | Posted IP 162.1*****