» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரேஷன் கடையில் மோடியின் புகைப்படம் எங்கே? சிலிண்டரில் ஒட்டிய தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி

சனி 3, செப்டம்பர் 2022 5:26:40 PM (IST)



ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் எங்கே? என்று கேள்வி கேட்ட நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிலிண்டரில் மோடியின் புகைப்படத்தை தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சி ஓட்டியுள்ளனர். 

தெலங்கானா சென்றிருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நியாயவிலைக் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் ஏன் வைக்கப்படவில்லை என்று காமாரெட்டி மாவட்ட ஆட்சியரை கடிந்து கொண்டுள்ளார்.  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர், தெலங்கானாவில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளின் மீது மோடிஜி ரூ.1105 என்று மோடி சிரிப்பது போன்ற புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விடியோவை தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் நிர்வாகி கிரிஷன் பகிர்ந்திருப்பதோடு, பிரதமர் மோடியின் புகைப்படத்தைத் தானே கேட்டீர்கள், இங்கே இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகப்பரவி வருகிறது. முன்னதாக, நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசிக்கான மானியத்தில், மாநில அரசின் பங்கும், மத்திய அரசின் பங்கும் இருக்கிறது என்பது குறித்து தனக்குத் தெரியாது என்று ஆட்சியர் ஜிதேஷ் பட்டீல் பதிலளித்ததைத் தொடர்ந்து, அடுத்த 30 நிமிடத்தில் நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ளுமாற நிர்மலா சீதாராமன் உத்தரவும் பிறப்பித்தார்.

பின்நூர் பகுதியில் பயனாளிகளிடம் பேசிக் கொண்டிருந்த நிர்மலா சீதாராமன், அங்கிருந்த மாவட்ட ஆட்சியரிடம், மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் அரிசிக்கான மானியத்தில் மத்திய அரசு ரூ.29ஐ வழங்குகிறது. மாநில அரசு வெறும் 4 ரூபாய்தான் வழங்குகிறது. அப்படியிருக்கும்போது, ஏன் நியாயவிலைக் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வைக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

மானிய பங்கீடு குறித்து தனக்குத் தெரியாது என்று ஆட்சியர் பதிலளித்ததைக் கேட்டு நிர்மலா சீதாராமன் கடும் அதிர்ச்சியடைந்தார். இது குறித்த விவரங்களை 30 நிமிடங்களில் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார். ஆனால், ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடுவதற்கோ, பிரதமர் மோடியின் புகைப்படத்தைக் கொண்டு வந்து மாட்டுமாறு கூறுவதற்கோ, மத்திய அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்று தெலங்கானா நிதியமைச்சர் ஹரீஷ் ராவ் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory