» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் ஊடுருவல் முறியடிப்பு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
வியாழன் 25, ஆகஸ்ட் 2022 5:27:52 PM (IST)
ஜம்மு-காஷ்மீர் உரி பகுதியில் ஊருடுவ முயன்ற பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா அருகே உரியின் கமல்கோட் செக்டரில் உள்ள மடியன் நானக் போஸ்ட் அருகே பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இந்திய பாதுகாப்புப்படை மற்றும் காவல் துறையினரால் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மண்டல போலீஸ் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. முன்னதாக, ஜம்மு காஷ்மீர் அக்னூர் செக்டரில் உள்ள பல்லன் வாலாவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியில் கடந்த 72 மணி நேரத்தில் பயங்கரவாதிகளின் மூன்றாவது ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு முறியடித்தது குறிப்பிடத்தக்கது.