» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மத்திய அரசில் 37 பணியிடங்களுக்கு தேர்வு: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வியாழன் 25, ஆகஸ்ட் 2022 11:58:36 AM (IST)
மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 37
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
இன்பர்மேசன் சர்வீஸ் - 22
பிளையிங் டிரைனிங் -0 4
சயின்டிபிக் ஆபிசர் - 03
அசிஸ்டென்ட் இயக்குநர் - 02
எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் - 02
போட்டோகிராபிக் ஆபிசர் - 02
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2022
தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட மேலும் விவரங்கள் அறிய https://upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.