» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அரசில் 37 பணியிடங்களுக்கு தேர்வு: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

வியாழன் 25, ஆகஸ்ட் 2022 11:58:36 AM (IST)

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. 

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 37

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

இன்பர்மேசன் சர்வீஸ் - 22

பிளையிங் டிரைனிங் -0 4

சயின்டிபிக் ஆபிசர் - 03

அசிஸ்டென்ட் இயக்குநர் - 02

எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் - 02

போட்டோகிராபிக் ஆபிசர் - 02

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை : https://upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2022

தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட மேலும் விவரங்கள் அறிய https://upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory