» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வியாழன் 21, அக்டோபர் 2021 4:24:18 PM (IST)

மத்திய அரசின் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை மூன்று சதவிகிதம் வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 17 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்தாண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் இது அமலுக்குவந்தது. இதனால், 48.34 லட்சம் ஊழியர்களும் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெற்றனர். 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் ஜூன் 30ஆம் தேதி வரை, வெளியான அறிவுப்புகளில் அகவிலைப்படி குறித்து தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த காலத்திற்கான அகவிலைப்படி விகிதம் அடிப்படை ஊதியத்தில் 17 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், இது கூடுதல் தவணைகளுடன் அடிப்படை ஊதியத்தில் 28 சதவிகிதமாக ஜனவரி 1, 2020 அன்று உயர்த்தப்பட்டது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், "இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பின்வருமாறு அகவிலைப்படி சதவிகிதம் கணக்கிடப்பட்டது.

2020ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை, அடிப்படை ஊதியத்தில் 21 சதவிகிதமாக அகவிலைப்படி கணிக்கிடப்பட்டது. 2020ஆம் ஆண்டு, ஜூலை 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை, அடிப்படை ஊதியத்தில் 24 சதவிகிதமாக அகவிலைப்படி கணிக்கிடப்பட்டது.

2021ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை, அடிப்படை ஊதியத்தில் 28 சதவிகிதமாக அகவிலைப்படி கணிக்கிடப்பட்டது. கோவிட் -19 தொற்று நோயைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 ஆகிய தேதிகளில் வழங்க வேண்டிய அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தின் மூன்று கூடுதல் தவணைகளை அரசு முடக்கியிருந்தது.

இதற்கிடையே,  ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் பணிக்கொடையும் ரொக்கமாக பணமும் பெறுவர் என மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்துறை செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.  மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory