» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
துப்பாக்கி முனையில் நடிகையிடம் ரூ.7 லட்சம் பறிப்பு: முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை
வியாழன் 16, செப்டம்பர் 2021 12:13:26 PM (IST)
டெல்லியில் துப்பாக்கி முனையில் நடிகையிடம் ரூ.7 லட்சம் பணம், மற்றும் நகைகள் பறித்துச் சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பிரபல இந்தி நடிகை நிகிதா ராவல். இவர் டெல்லி சாஸ்திரி நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். படப்பிடிப்பு முடிந்து நிகிதா ராவல் வீடு திரும்பியபோது காரில் வந்த முகமூடி கொள்ளையர்கள் அவரை வழிமறித்தனர். துப்பாக்கியை காட்டி மிரட்டி நிகிதாவிடம் இருந்து ரூ.7 லட்சம் மற்றும் நகைகளை பறித்து சென்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை சம்பவம் குறித்து நடிகை நிகிதா ராவல் கூறும்போது, "இந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை. நான் உயிருக்கு பயந்து அலமாரியில் ஒளிந்து கொண்டேன். நான் உயிரோடு இருப்பதையும் நம்ப முடியவில்லை'' என்றார்.