» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய பிரிட்டன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு நவம்பரில் துவக்கம்: இந்தியா அறிவிப்பு

புதன் 15, செப்டம்பர் 2021 12:29:01 PM (IST)

இந்திய பிரிட்டன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நவம்பர் 1 முதல் துவங்கும் என்று இந்திய தொழில் வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள பிரிட்டன் வர்த்தக செயலாளர் எலிசபெத் டிரஸ்-ஐ,  புது டெல்லியில் இந்திய தொழில் வர்த்தக அமைச்சர் கோயில் பேச்சு நடத்தினார். இந்தியா பிரிட்டன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் பற்றிய விவரம் அடங்கிய செய்திக்குறிப்பு இந்திய தொழில் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டது.

அதில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் இந்திய பிரிட்டன் சுதந்திர வர்த்தகத்துக்கான பேச்சுவார்த்தை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தையை வரும் 2022ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முடிக்கவேண்டும் என்று இருதரப்பும் இலக்கு நிர்ணயித்துள்ளன என்றும் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது போல் பிரிட்டன் அரசாங்கம் தனியாக செய்தி குறிப்பாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory