» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அக்டோபர் 1ம் தேதி முதல் ஓபிசி, யுபிஐ வங்கிகளின் காசோலைகள் செல்லாது

வியாழன் 9, செப்டம்பர் 2021 5:14:53 PM (IST)

அக்டோபர் 1ம் தேதி முதல் ஓபிசி, யுபிஐ வங்கிகளின் காசோலைகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (யுபிஐ) ஆகிய இரண்டு வங்கிகளும், 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஞ்சாப் நேசனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன, இருப்பினும் தற்போதுவரை இந்த இரண்டு பழைய வங்கிகளின் காசோலை புத்தகங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. 

இந்நிலையில், அக்டோபர் 1ம் தேதி முதல், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (யுபிஐ) ஆகிய வங்கிகளின் பழைய காசோலை புத்தகங்கள் நிறுத்தி வைக்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அறிவித்துளள்து.

வாடிக்கையாளர்கள் பழைய இ-ஓபிசி மற்றும் இ-யுஎன்ஐ காசோலை புத்தகத்தை, புதுப்பிக்கப்பட்ட பிஎன்பி ஐஎப்எஸ்சி மற்றும் எம்ஐசிஆருடன் கூடிய பிஎன்பி காசோலை புத்தகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கிளையில் இருந்து புதிய காசோலை புத்தகத்தைப் பெறலாம். ஏடிஎம்கள், இணைய வங்கி மற்றும் பிஎன்பி அழைப்பு மையங்களின் உதவியுடனும் புதிய காசோலை புத்தகங்களை கோரலாம்.

வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனையில் உள்ள சிரமத்தை தவிர்க்க, இனி புதுப்பிக்கப்பட்ட பிஎன்பி ஐஎப்எஸ்சி மற்றும் எம்ஐசிஆருடன் கூடிய புதிய பிஎன்பி காசோலை புத்தகத்தை மடடுமே பயன்படுத்தவேண்டும். ஏதேனும் உதவி அல்லது கூடுதல் தகவல்களுக்கு வங்கியின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-180-2222 ஐ தொடர்பு கொள்ளலாம் என பின்பி வங்கி தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory