» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நேரடித் தேர்வு நடத்த இடைக்கால தடை : உச்சநீதிமன்றம் உத்தரவு

வெள்ளி 3, செப்டம்பர் 2021 5:31:28 PM (IST)

கேரளத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6-ல் அறிவிக்கப்பட்டிருந்த நேரடித் தேர்வுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா குறைந்து வரும் நிலையில், கேரளத்தில் மட்டும் நாள்தோறும் 30,000க்கும் அதிமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 6ஆம் தேதி பள்ளிகளில் நேரடி தேர்வுகள் நடத்த மாநில அரசு அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில், கேரளத்தில் கரோனா பரவல் அதிகரிப்பால் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. நாள்தோறும் 35,000 பேர் பாதிக்கப்படும் நிலையில் குழந்தைகளை ஆபத்தில் விடமுடியாது. ஆகையால், கேரள அரசின் அறிவிப்பிற்கு இடைக்கால தடைவிதித்து அடுத்த விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory