» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குஜராத்தில் செப்.2 முதல் 6-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: அரசு அறிவிப்பு
புதன் 25, ஆகஸ்ட் 2021 3:55:09 PM (IST)
குஜராத்தில் 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 2 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக மாநில கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை குறையத் தொடங்கியதும், ஒவ்வொரு மாநிலங்களிலும் படிப்படியாக பள்ளிகளைத் திறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குஜராத்தில் தற்போது 160 பேர் மட்டுமே நோய்த் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 8,15,091 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 10,079 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர்.