» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரக்ஷா பந்தன் நாளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்: ஜனாதிபதி வாழ்த்து

ஞாயிறு 22, ஆகஸ்ட் 2021 9:53:14 AM (IST)

ரக்ஷா பந்தன் விழாவையொட்டி தேசத்தை கட்டமைப்பதில் தங்களுடைய பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் மக்கள் தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என மக்களுக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரக்ஷாபந்தன்விழாவையொட்டி  வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ரக்ஷா பந்தன் விழா அன்பு, பற்று, சகோதரா்கள் மற்றும் சகோதரிகளுக்கு இடையேயான நம்பிக்கையின் அடையாளமாகும். நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் இந்த விழா வலுப்படுத்துகிறது. இந்த சிறப்பு தருணத்தில், மக்கள் தேசத்தை கட்டமைப்பதில் தங்களுடைய பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதையை காப்பதில் உயா் முக்கியத்துவம் அளிக்கக் கூடிய, அவா்களின் விருப்பங்களை தடையின்றி நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வகையிலான ஒரு இணக்கமான சமூகத்தை கட்டமைப்பதில் பங்களிப்பை செய்வதற்கு இந்த நன்னாளில் நாம் உறுதியேற்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory