» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரோனா 3வது அலையை எதிர்க்கொள்ள இந்தியா தயார்: அமைச்சர் அனுராக் அறிவிப்பு
சனி 21, ஆகஸ்ட் 2021 12:36:13 PM (IST)
கரோனா 3வது அலையை எதிர்க்கொள்ள இந்தியா தயாராகி விட்டது என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 3வது கரோனா தொற்று அலையைச் சமாளிக்க இந்தியா ரூ.123 கோடி ஒதுக்கி உள்ளது. மூன்றாவது அறை குழந்தைகளை பெரிதும் பாதிக்கும் என்று கருத்து வெளியிடப்பட்டு இருக்கிற காரணத்தினால் குழந்தைகளுக்கான சிகிச்சை குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 3வது கரோனா தொற்று அலையைச் சமாளிக்க தயாராக இருக்கிறது என்று தெரிவித்தார்.