» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சிலர் வெட்கமின்றி தலிபான்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர் - உ.பி. முதல்வர் கண்டனம்
வியாழன் 19, ஆகஸ்ட் 2021 4:24:46 PM (IST)
சிலர் வெட்கமின்றி தலிபான்களுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர்களது அனைத்து முகங்களும் வெளிப்பட வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச சட்டப் பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் கூட்டத் தொடரின் 3வது நாளில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆப்கானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக கொடுமைகள் நடக்கும் நிலையில் சிலர் வெட்கமின்றி தலிபான்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். அவர்களது அனைத்து முகங்களும் வெளிப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
முன்னதாக சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஷபிகுர் ரஹ்மான் பார்க், தலிபான்கள் தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடுகிறார்கள். ஆப்கானிஸ்தான் மக்களும், அவர்களின் தலைமையின்கீழ் இருக்கவே விரும்புகிறார்கள் என்று தெரிவித்ததாக செய்தி வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டப்பேரவையில் பேசியுள்ளார். ஆனால் சமாஜ்வாதி எம்.பி. பார்க், தன்னுடைய கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.