» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஆப்கானில் சிக்கியுள்ள 200 சீக்கியர்களை மீட்க நடவடிக்கை : பஞ்சாப் முதல்வர் வலியுறுத்தல்

திங்கள் 16, ஆகஸ்ட் 2021 4:55:33 PM (IST)

ஆப்கானில் சிக்கியுள்ள 200 சீக்கியர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாப் முதல்வர்  வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலீபான்கள் வசம் சென்றுள்ளதால், அங்கிருந்து வெளிநாட்டவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப முயன்று வருகின்றனர். தலைநகர் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், காபூல் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால், அங்கிருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 200- சீக்கியர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பஞ்சாப்  முதல் மந்திரி அமரீந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory