» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகத்தின் உரிமையை தடுக்க தமிழ்நாட்டிற்கோ, கேரளாவுக்கோ அதிகாரம் இல்லை : சித்தராமையா

வெள்ளி 13, ஆகஸ்ட் 2021 5:15:46 PM (IST)

மேகதாது திட்டம் கர்நாடகத்தின் உரிமை. அதை தடுக்கும் அதிகாரம் தமிழ்நாட்டிற்கோ கேரளாவுக்கோ இல்லை என சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இந்த நேரத்தில் கடந்த 74 ஆண்டுகள் வரலாற்றை சற்று திரும்பி பார்க்க வேண்டும். நாட்டில் முக்கியமான நாட்களை நாம், சமூக-பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த உறுதிமொழி ஏற்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டாடுகிறோம்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதிலும், வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதிலும் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது. கொரோனாவால் நாட்டில் 50 லட்சம் பேர் இறந்திருப்பார்கள். கர்நாடகத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக இருக்கும். ஆனால் மாநில அரசு இறப்புகளை குறைத்து காட்டுகிறது.

மேகதாது திட்டம் கர்நாடகத்தின் உரிமை. அதை தடுக்கும் அதிகாரம் தமிழ்நாட்டிற்கோ அல்லது கேரளாவுக்கோ இல்லை. கர்நாடகத்தின் நலன்களில் அக்கறை இருந்தால் சி.டி.ரவி, மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியை பெற்று தர வேண்டும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory