» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடியுடன் தெலங்கானா தமிழிசை சந்திப்பு

வியாழன் 12, ஆகஸ்ட் 2021 4:57:34 PM (IST)



டெல்லியில் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இரு மாநில வளர்ச்சிக்கும் மத்திய அரசு உதவ வேண்டும் என ஆளுநர் கோரிக்கை வைத்தார். அதற்கு, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

மேலும், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில மக்களின் நலன் குறித்து அக்கறையுடன் பிரதமர் விசாரித்தார். கரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களுக்கும், செய்த உதவிகளுக்கும், தற்போது மத்திய அரசு கொண்டு வந்த பிற்படுத்தப்பட்டோர் சட்ட முன் வரைவிற்கும், துணைநிலை ஆளுநர் தமிழிசை நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், பிரதமர் அளித்த ஊக்கத்திற்கும், வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டதாக, இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் தமிழிசை மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory