» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி பயணம்: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

செவ்வாய் 27, ஜூலை 2021 5:36:40 PM (IST)



மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி, 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், தற்போது பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். அப்போது, கூடுதல் தடுப்பூசிகள் வழங்குவது மற்றும் மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், மேற்கு வங்கத்தின் நிதி நெருக்கடி சூழலை போக்கும் வண்ணம், மத்திய அரசு நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மம்தா பானர்ஜி முன்வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த சந்திப்பை தொடர்ந்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் சந்திக்க உள்ளார். மேலும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் திரிணமூல் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நாளை காலை மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்த உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory