» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிரத்தில் கனமழை எச்சரிக்கை : 15 தேசிய பேரிடர் மீட்புப் படைகள் குவிப்பு

வியாழன் 10, ஜூன் 2021 12:03:11 PM (IST)

மகாராஷ்டிரத்தில் கனமழை எச்சரிக்கை எதிரொலியாக பல்வேறு பகுதிகளில் 15 தேசிய பேரிடர் மீட்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

தேசிய பேரிடர் மீட்புப் படை இயக்குநர் எஸ்.என். பிரதான் இதனை சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 4 குழுக்கள் ரத்னகிரியிலும், மும்பை, சிந்துதுர்க், பால்கர், ராய்கட், தாணே ஆகிய பகுதிகளில் தலா 2 குழுக்களும், குர்லாவில் ஒரு குழுவும் முகாமிட்டுள்ளன.

கனமழைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, மாநில அரசின் கோரிக்கைக்கு ஏற்ப மேற்கண்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக பிரதான் தெரிவித்துள்ளார். ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுவில் 47 பணியாளர்கள் இருப்பார்கள். மும்பை மற்றும் புறநகரில் நேற்று பெய்த கனமழையால் சாலைகள், தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கின. இதனால் புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory