» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ரயில்வே துறையில் 5ஜி சேவை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதன் 9, ஜூன் 2021 5:32:58 PM (IST)

ரயில்வே துறையில் 5ஜி சேவை வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் ரயில் நிலையங்கள், ரயில் சேவை, மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பயன்பாட்டுற்காக ரயில்வே துறையில் 5ஜி இணையதள சேவை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில், 5ஜி இணையதள சேவை மூலம் ரயில் ஓட்டுநர்கள் மற்றும் காவலர்களுடன் தடையற்ற தகவல் தொடர்புகளை உறுதி செய்ய முடியும். இதன் மூலம் பாதுகாப்பு மேம்படுகிறது.கூடுதலாக, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ரயில் மோதல் தவிர்ப்பு முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது ரயில் மோதல்களைத் தவிர்த்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ரூ.25,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory