» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விஷம் வைத்து தெரு நாய்கள் சாகடிப்பு: பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க மேனகா காந்தி கோரிக்கை

வியாழன் 3, ஜூன் 2021 11:36:35 AM (IST)

ஒடிசாவில் விஷம் வைத்து தெரு நாய்கள் சாகடிக்கப்பட்டது தொடர்பாக பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேனகா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

ஒடிசா மாநிலம் புர்லாவில் மகாநதி நிலக்கரி நிறுவன வளாகம் அமைந்திருக்கிறது. இங்கு பணிபுரியும் ஒரு இளம்பெண் அதிகாரி, தனது இருசக்கர வாகனத்தை தெரு நாய்கள் சேதப்படுத்திவிட்டதாக நிறுவன பாதுகாவலர்களிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் தெரிவித்தார். இந்நிலையில் அந்தப் பெண் அதிகாரியின் வீட்டின் முன்பு 11 தெரு நாய்கள் செத்துக் கிடந்தன. அது அப்பெண் அதிகாரியின் செயலாகத்தான் இருக்க வேண்டும், அவர்தான் அந்த நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றிருக்க வேண்டும் பாதுகாவலர்கள் சந்தேகிக்கின்றனர். 

இதுதொடர்பாக உள்ளூர் பிராணிகள் நல அமைப்பினர் புர்லா போலீசில் புகார் அளித்தனர். ஆனால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள், பிராணிகள் நல அமைப்பு தலைவரும், மக்களவை எம்.பி.யுமான மேனகா காந்தியிடம் இந்த விஷயத்தில் தலையிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை தொடர்புகொண்டு பேசிய மேனகா காந்தி, குறிப்பிட்ட பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருக்கிறார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory