» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

லட்சத்தீவுகள் நிர்வாகியை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

வெள்ளி 28, மே 2021 4:40:38 PM (IST)

லட்சத்தீவுகள் நிர்வாகியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் பல்வேறு நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உள்ளாகின. அவரின்   புதிய உத்தரவுகள் லட்சத் தீவுகளில் வாழும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது சுட்டுரைப் பக்கத்தில், "லட்சத் தீவுகளில் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் விதிகள் மீறப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” என விமர்சனம் தெரிவித்துள்ளார்.  மேலும் அவர், "லட்சத்தீவுகளின் நிர்வாகி உடனடியாக திரும்பப் பெறப்பட்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory