» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கரும்பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் : மத்திய அரசு
வியாழன் 20, மே 2021 4:05:32 PM (IST)
அனைத்து மாநில அரசுகளும் கரும்பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பரவலாக கரும்பூஞ்சை நோய் பாதிப்பு பரவத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அனைத்து மாநில அரசுகளும் கரும்பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும். தொற்று நோய்கள் சட்டம் 1897 இன் கீழ் கரும்பூஞ்சை பாதிப்பையும் தொற்றுநோய் என பட்டியலிடவேண்டும்.
கரும்பூஞ்சை நோயை கண்டறிதல் மற்றும் அதற்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக மத்திய அரசு மற்றும் ஐசிஎம்ஆர் சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் னியார் மருத்துவ நிறுவனங்கள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கரோனா நோயாளிகளிடையே காணப்படும் கரும்பூஞ்சை அறிகுறிகள் என அனைத்து தகவல்களும் சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள், கரும்பூஞ்சை பாதிப்பை ஏற்கனவே தொற்று நோயாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
sapienceமே 20, 2021 - 11:24:42 PM | Posted IP 162.1*****