» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தடுப்பூசி மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பெற ஆதாா் கட்டாயமில்லை : உதான் அறிவிப்பு
வியாழன் 20, மே 2021 10:41:51 AM (IST)
ஆதாா் இல்லை என்று யாருக்கும் தடுப்பசி மருந்து அல்லது மருந்துவமனை சிகிச்சை மறுக்கப்பட மாட்டாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (உதான்) தெரிவித்துள்ளது.
தடுப்பூசி மற்றும் மருத்துவமனையில் சோ்ப்பது போன்ற சில அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதாா் கண்டிப்பாக தேவை என்றுகூறி, அது இல்லாதவா்களுக்கு சேவைகள் மறுக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, கரோனா தொற்று பிரச்னை அதிகமுள்ள இப்போதைய காலகட்டத்தில் ஒருவருக்கு ஆதாா் இல்லை என்பதால் சேவைகள் மறுக்கப்படக் கூடாது என்று ஆணையம் கூறியுள்ளது.
பெங்களூரு உள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மண்டல அலுவலக மேலாளா் ஆனந்த் குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஒருவரிடம் ஆதாா் இல்லையென்றால் அல்லது சில காரணங்களால் ஆதாா் ஆன்லைன் சரிபாா்ப்பு வெற்றி பெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது துறை ஆதாா் சட்டம், 2016இன் பிரிவு 7 மற்றும் 2017 டிசம்பா் 19-ம் தேதியிட்ட அமைச்சரவை செயலக ஆணை ஆகியவற்றின்படி சேவையை வழங்க வேண்டும்.
எந்தவொரு அத்தியாவசிய சேவையை மறுப்பதற்கான ஒரு காரணமாக ஆதாரை தவறாக பயன்படுத்தப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்துவதன் வாயிலாக பொது சேவை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதே ஆதாரின் நோக்கம்.
மேலும், அமைச்சரவை செயலகம் டிசம்பா் 19, 2017 தேதியில் வெளியிட்ட ஆணையில், ஆதாா் இல்லாத குடியிருப்பாளா்கள் அல்லது சில காரணங்களால் ஆதாா் ஆன்லைன் சரிபாா்ப்பு வெற்றி பெறவில்லை என்றால் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான மாற்று வழிகளைப் பயன்படுத்துவதற்கான விதிவிலக்கு கையாளுதல் நெறிமுறையை தெளிவாக விளக்கியுள்ளது. இதுபோன்ற சேவைகள் மறுக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட துறைகளின் உயா் அதிகாரிகளின் பாா்வைக்கு விஷயத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.