» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டவ் தே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் ஆய்வு
புதன் 19, மே 2021 5:55:43 PM (IST)
டவ் தே புயலால் குஜராத் மற்றும் டையூ பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
குஜராத் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு கரையைக் கடந்த டவ் தே புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் மற்றும் வெள்ளத்துக்கு 7 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மரங்கள் சாய்ந்ததால், மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
விழுந்து கிடந்த மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை ராணுவத்தினர் அகற்றி, போக்குவரத்து வசதியை ஏற்படுத்தினர். புயல் சேத விபரங்களை கணக்கெடுக்கும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் வெள்ளம் வடியாததால் பெரும்பாலானோர் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். டவ் தே புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்காக, பிரதமர் மோடி இன்று குஜராத் சென்றார்.
காலை 9.30 மணிக்கு விமானம் மூலம் குஜராத் மாநிலம் பவ்நகர் சென்ற பிரதமர் மோடி, மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை ஹெலிகாப்டரில் இருந்தபடி ஆய்வு செய்து வருகிறார். பிரதமருடன் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியும் சென்றுள்ளார். உனா, டையூ, ஜாஃபராபாத், மஹுவா பகுதிகளை பார்வையிட்ட மோடி, அகமதாபாதில் வெள்ள மீட்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். பின்னர், ஆமதாபாத்தில், அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
unmaiமே 20, 2021 - 12:10:42 PM | Posted IP 162.1*****