» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேஜரிவால் பேச்சுக்கு சிங்கப்பூர் அரசு கண்டனம்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்
புதன் 19, மே 2021 4:45:02 PM (IST)
உருமாற்றம் அடைந்த சிங்கப்பூர் கரோனா என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியதற்கு சிங்கப்பூர் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியா -சிங்கப்பூர் இடையே விமான சேவை ரத்து செய்யப்பட வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேற்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். சிங்கப்பூர் கரோனா என எதுவும் இல்லை என்று டெல்லி முதல்வரின் பேச்சுக்கு சிங்கப்பூர் வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா சார்பாக அரவிந்த் கேஜரிவால் பேசவில்லை என மத்திய அரசு தரப்பில் சிங்கப்பூர் அரசுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், சிலரது பொறுப்பற்ற பேச்சால் இரு நாட்டு உறவில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.