» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை: தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு சசிதரூர் கடிதம்
சனி 10, செப்டம்பர் 2022 5:10:15 PM (IST)
காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை நிலவ வேண்டும் என காங்கிரஸ் தேர்தல் நடத்தும் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு, சசிதரூர், கார்த்தி உள்ளிட்ட எம்.பி.,க்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

வேட்பாளர்கள், நாடு முழுவதும் உள்ள 28 பிரதேச காங்கிரஸ கமிட்டிகளுக்கம், 9 யூனியன் பிரதேசங்களுக்கும் சென்ற வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது.காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மையும், நியாயமாக நடப்பதையும் நினைத்து கவலைப்படுகிறோம். கட்சியில் வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என்ற எங்களது கோரிக்கைக்கு தவறான விளக்கம் அளிக்கப்படுவது வருத்தமளிக்கிறது.
கட்சியின் எந்தவொரு, உள் ஆவணமும், அதில் உள்ள தகவல்களை தவறாக பயன்படுத்த விரும்புபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வெளியிடுங்கள் என நாங்கள் ஆலோசனை தரவில்லை. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வதற்கு முன், கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் குழு, பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். பட்டியலை வழங்கினால், தேர்தல் பணியில் இருந்து தன்னிச்சையான செயல்கள் அகற்றப்படும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக பற்றி அ.தி.மு.க.வினர் விமர்சிக்க கூடாது: எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
புதன் 20, செப்டம்பர் 2023 5:29:51 PM (IST)

ஆவின் நெய் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி கோரிக்கை
வியாழன் 14, செப்டம்பர் 2023 5:12:37 PM (IST)

மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு - வி.கே.சசிகலா நம்பிக்கை
திங்கள் 11, செப்டம்பர் 2023 10:41:55 AM (IST)

நாட்டின் பெயர் மாற்றுவதால் என்ன ஆகப் போகிறது? சீமான் கேள்வி
புதன் 6, செப்டம்பர் 2023 3:59:14 PM (IST)

டிசம்பர் மாதத்திலேயே மக்களவைத் தேர்தல் வரலாம்: மம்தா பானர்ஜி கணிப்பு
செவ்வாய் 29, ஆகஸ்ட் 2023 10:43:34 AM (IST)

தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக ஆள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
வியாழன் 17, ஆகஸ்ட் 2023 5:49:00 PM (IST)
