» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
இடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி: அதிமுக அரசுக்கு ஆபத்து நீங்குகிறது..?
வெள்ளி 24, மே 2019 10:30:52 AM (IST)
தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக, தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது.

வழக்குகளைக் காரணம் தள்ளிவைக்கப்பட்ட 4 தொகுதிகளான திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் கடந்த 19ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 22 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 23) காலை 8 மணிக்குத் தொடங்கியது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரப்படி, அதிமுக 9 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக, தமிழக சட்டமன்றத்தில் அதிமுக பெரும்பான்மை பெற்றுள்ளது.
22 தொகுதி இடைத்தேர்தல் நிலவரங்கள் தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை உறுதி செய்திருக்கின்றன. மேலும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெறும் 7 இடங்களில் வெற்றி பெற்றாலே, அதிமுக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. அதனால், 2021ம் ஆண்டு வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை. இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பேரவையில் அதிமுகவுக்கு இருந்து வந்த பெரும்பான்மை சிக்கல்கள் தீர்ந்துள்ளன.
100-ஐத் தாண்டியது திமுக:
இடைத் தேர்தலில் 13 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம், பேரவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 88-லிருந்து 101 ஆக உயர்ந்துள்ளது.
பேரவையில் கட்சிகள் பலம்
(தேர்தல் முடிவுக்குப் பிறகு)
மொத்த இடம் 234
அதிமுக 122
திமுக 101
காங்கிரஸ் 8
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1
சுயேச்சை 1
பேரவைத் தலைவர் 1
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்து உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
புதன் 20, ஜனவரி 2021 5:29:20 PM (IST)

ரசிகர்கள் விரும்பிய கட்சியில் இணைந்து செயல்படலாம் : ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு
திங்கள் 18, ஜனவரி 2021 12:35:52 PM (IST)

தமிழகத்திலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக வெற்றி பெறப்போகிறது: நடிகை குஷ்பு பேச்சு
ஞாயிறு 10, ஜனவரி 2021 6:40:06 PM (IST)

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தீர்மானம் : முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம்
வெள்ளி 1, ஜனவரி 2021 12:08:48 PM (IST)

புதுவையில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பஞ்சாயத்து தேர்தல் நடத்தவில்லை: பிரதமர் அதிருப்தி
சனி 26, டிசம்பர் 2020 4:54:36 PM (IST)

மக்களை பாதிக்கும் சிலிண்டர் விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
புதன் 16, டிசம்பர் 2020 11:47:40 AM (IST)
