» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க துவக்க விழா!

திங்கள் 22, ஜூலை 2024 10:03:41 AM (IST)



நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் சாரணர் இயக்க துவக்க விழா நடந்தது.

நாசரேத் மர்கா ஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப் பட்டு மாணவர்களுக்கு வழங்கப் பட்டு வருகின்றது. அதன் தொடர்ச் சியாக, பாரத சாரண இயக்கத்தின் துவக்க விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்து சாரணர் இயக்க விழாவினை துவக்கி வைத்தார். 

உதவி தலை மையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார்.இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் அனைவரையும் வரவேற்றார். சாரண இயக்க பொறுப்பாசிரியர் ஆபிரகாம் இமானுவேல் மாணவர்க ளுக்கு சாரண இயக்கத்தின் தோற்றம், வரலாறு மற்றும் அதன் பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். சாரணர் அணி யும் சீருடையின் முக்கியத்துவம், மற்றும் பிற சிறப்பம்சங்கள் குறித்தும் விளக்கி கூறினார். சாரணர் இயக்க மாணவர்கள் வணக்கம் செலுத்தும் முறை, ஒருவரோடு சந்திக்கும்பொழுது கை கொடுக்கும் முறை ஆகிய வற்றின் புதுமை குறித்து மாண வர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 

தொடர்ந்து, சாரணர் இயக்கத்தின் சார்பில் பள்ளியின் முன்பகுதியில் மரக்கன்று நடப்பட்டது.நிகழ்ச்சி யில் கணித ஆசிரியர் நேசகுமார், உடற்கல்வி ஆசிரியர் தனபால், என்சிசி அலுவலர் சுஜித் செல்வ சுந்தர் ஆகியோர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாரணர் இயக்க மாணவர்களை யும், பொறுப்பாசிரியரையும் தாளா ளர் சுதாகர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory