» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி சக்தி வித்யாலயாவில் குருபூர்ணிமா

சனி 20, ஜூலை 2024 10:59:40 AM (IST)



தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில்   குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

விழாவிற்கு தலைமை வகித்து பள்ளியின் முதல்வர் ஆ.ஜெயசண்முகம் பேசுகையில், குருபூர்ணிமா என்பது ஆடிமாத பௌர்ணமி நாளில் மகரிஷி வேத வியாசர் அவதரித்த நாள் என்றும், இவரே நான்கு வேதங்களையும் எழுதியவர் என்று கூறினார். தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பும், குரு தன் சிஷ்யனிடம் காட்டும் அக்கறையும் உலகில் மிகமிக உயர்வானது.

எனவே மாணவ, மாணவிகளாகிய நீங்கள் ஆசிரியர் கற்றுத்தரும் பாடங்களை கூர்மையாக உற்று நோக்கி, அதைப் பதிவாக்கினால் அதுவே அவனை வழிநடத்தும். எனவே ஆசிரியைகளுக்கு மரியாதை கொடுத்து, அவர்களின் வழிகாட்டுதல்களோடு வாழ்க்கையில் நம் இலட்சியத்தை அடைய உறுதி கொள்வோம் என்று வாழ்த்தி பேசினார்.

அதன்பின் மாணவ, மாணவிகள் பூக்களை சமர்ப்பித்து, ஆரத்தி எடுத்து ஆசிரியைகளை வணங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆசிரியைகள் அனைவரும் பூத்தூவி மாணவ, மாணவிகளை வாழ்த்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை துணைமுதல்வர் ரா.ச.பிரியங்கா செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory