» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

செக்காரக்குடி அரசு பள்ளியில் டெலஸ்கோப் பயிற்சி

வெள்ளி 19, ஜூலை 2024 3:14:30 PM (IST)



செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கு  டெலஸ்கோப்பில் நிலவை காண்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம்,செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில்  மாணவர்களுக்கு  டெலஸ்கோப்பில் நிலவை காண்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு தலைமைஆசிரியர் முத்துகுமார்  தலைமை வகித்தார்.   தூத்துக்குடி அஸ்டரோ கிளப் கருத்தாளர் முருகப்பெருமான் முன்னிலை வகித்தார் உதவி  தலைமை ஆசிரியர் நம்பிராஜன் வரவேற்றார்   

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி வன்னியப்பன்  மாணவர்களுக்கு நீல் ஆம்ஸ்ட்ராங் 1969 ஜூலை 21ல் நிலவில் முதலில் கால் பதித்த தினம் குறித்தும் விண்வெளி அறிவியல் முன்னேற்றங்கள், 2024 ஆம் ஆண்டின் சர்வதேச நிலவு தினத்தின் கருப்பொருள் "நிழல்களை ஒளிரச் செய்தல்"  குறித்து பேசினார்.

மாணவர்களும் ஆசிரியர்களும் டெலஸ்கோப் மூலம் தொலைவில் உயரத்தில் உள்ள காற்றாடியில் எழுத்துக்களையும் காட்சிகளையும்  கண்டு மகிழ்ந்தனார் . ஆசிரியை அருள்செல்வி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். அறிவியல்ஆசிரியர் இராமசாமி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory