» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மூக்குப்பீறி பள்ளியில் உணவுத் திருவிழா
புதன் 22, மார்ச் 2023 4:44:00 PM (IST)
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி பள்ளியில் உணவுத் திருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூ.நா.தி.அ.க தூய. மாற்கு தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா மற்றும் எண்ணும், எழுத்தும், கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சிகள் சேகர குருவானவர் டேனியல் ஞானபிரகாசம் தலைமையில் நடைபெற்றது. சபை ஊழியர் எல்சின் வேத பாடம் வாசித்தார். மூக்குபீறி ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் ராஜேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன், ஆலய பரிபாலன கமிட்டி தலைவர் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி ஆசிரியர் சாலமோன் அனைவரையும் வரவேற்றார். எண்ணும் எழுத்தும் கற்றல் பற்றி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ராஜன் விரிவாக பேசினார். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் பல்வேறு வகையான பாரம்பரிய சத்தான உணவுகளை கொண்டு வந்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சத்தான கீரை சூப் மற்றும் பயறு வகைகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை கனகரதி பெப்பின் நன்றி கூறினார்