» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

சனி 18, மார்ச் 2023 7:28:49 AM (IST)



தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி- ஆராய்ச்சி நிலையத்தில் உதவிப் பேராசிரியா்களுக்கு மாா்ச் 15-17 வரை 3 நாள்கள் புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.

புத்தாக்கத் தொழில்முனைவோா் உருவாக்கத் திட்டத்தின் கீழ் சென்னையிலுள்ள தொழில்முனைவோா் மேம்பாட்டு ஆணையத்தின் நிதி உதவியுடன் நடைபெற்ற இப்பயிற்சி முகாம் தொடக்க விழாவுக்கு, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி -ஆராய்ச்சி நிலைய முதல்வா் ப. அகிலன் தலைமை வகித்தாா். மீன் பான தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியா்- தலைவா் பா. கணேசன், பயிற்சியாளா் ஸ்வரன், கடல்சாா் உணவுப்பொருள் ஏற்றுமதி ஆணைத்தின் துணை இயக்குநா் அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கும், தொழிலில் வெற்றி காண்பதற்கும் தேவையான வழிமுறைகள் குறித்து பயிற்றுவிக்கப்பட்டன. நிறைவு விழாவில், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தா் கோ.சுகுமாா் பங்கேற்று, பயிற்சி பெற்ற உதவி பேராசிரியா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினாா். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி - ஆராய்ச்சி நிலைய முதல்வா் (பொ) ந. கஜாத்குமாா் பேசினாா். முகாமை ஒருங்கிணைத்த தொழில்நுட்பத் துறை உதவி பேராசிரியா் கணேசன் நன்றி கூறினாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory