» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
புதன் 8, மார்ச் 2023 8:13:43 AM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் இணைய வழி வணிகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி நீதிமன்றம்,உறுதிமொழி ஆணையர் மற்றும் சமூக ஆய்வாளர் ச.சொர்ணலதா தலைமை வகித்து பேசுகையில், தரமான பொருட்களை வாங்கும் வழிமுறைகள், குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு சட்டங்கள் மற்றும் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் குறித்தும், இணையவழி மூலம் பொருட்களை வாங்கும் போது அதை விழிப்புணர்வுடன் வாங்க வேண்டுமென்றும் கூறினார்.
விழாவில் கல்லூரி செயலர் சிபானா, கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ், துணை முதல்வர் குழந்தை தெரஸ் மற்றும் சுயநிதி பிரிவின் இயக்குனர் ஜோஸ்பின் ஜெயராணி ஆகியோரின் வழிகாட்டுதலின் படி ஏற்பாடுகளை நுகர்வோர் மன்ற பொறுப்பாளர்கள் டெ. ரதி முனைவர். தா.பிரியாங்கா மற்றும் பேராசிரியர். தா. மனுவேல் இன்ஃபனி ஆகியோரும் சிறப்புர செய்தனர். இக்கூட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாமாண்டு மாணவிகள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா: கனிமொழி வழங்கினார்!
சனி 27, மே 2023 10:26:32 AM (IST)

தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
வெள்ளி 26, மே 2023 11:40:15 AM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா
திங்கள் 22, மே 2023 11:59:38 AM (IST)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.5 சதவீதம் தேர்ச்சி!
சனி 20, மே 2023 10:58:32 AM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் செவிலியர் தினவிழா
திங்கள் 15, மே 2023 3:46:49 PM (IST)

பிளஸ் டூ தேர்வில் நாசரேத் சாலமோன் பள்ளி சாதனை
புதன் 10, மே 2023 7:36:33 PM (IST)
