» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி
சனி 28, ஜனவரி 2023 12:38:35 PM (IST)

கோவில்பட்டி ஜேசிஐ சார்பில் இளைஞர்களின் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி, வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலக்குமி மேல்நிலைப் பள்ளி, காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலிருந்து தேசிய மாணவர் படை,நாட்டு நலப்பணித் திட்டம், சாரணர் இயக்கம், பசுமை படை, நுகர்வோர்மன்றங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள்கைகளில் தேசிய கொடி ஏந்தி தூய்மை இந்தியா விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஊர்வலமாக கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பிருந்து துவங்கி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி எட்டையாபுரம் சாலை வழியாக மீண்டும் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை வந்தடைந்தனர்.
விழிப்புணர்வு பேரணிக்கு ஜேசிஐ தலைவர் தீபன்ராஜ் தலைமை வகித்தார்.ஜேசிஐ முன்னாள் தலைவர்கள் லட்சுமி விக்னேஷ்,அருண்,முரளி கிருஷ்ணன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஜேசிஐ செயலாளர் சூர்யா அனைவரையும் வரவேற்றார். விழிப்புணர்வு பேரணியை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். இந்நிகழ்ச்சியில் பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், மாவட்ட நூலக ஆய்வாளர் (பணி நிறைவு) பூல்பாண்டி,உள்பட ஜேசிஐ உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜேசிஐ பொருளாளர் விஜய் கண்ணன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளாத்திகுளத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திங்கள் 20, மார்ச் 2023 9:42:57 PM (IST)

அரசுப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம்!
திங்கள் 20, மார்ச் 2023 8:07:30 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
சனி 18, மார்ச் 2023 7:28:49 AM (IST)

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் வினாடி வினா போட்டி
வெள்ளி 17, மார்ச் 2023 3:53:42 PM (IST)

புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி: சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டாமிடம்!
வெள்ளி 17, மார்ச் 2023 3:16:23 PM (IST)

பிள்ளையன்மனை பள்ளியில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வியாழன் 16, மார்ச் 2023 3:21:41 PM (IST)
