» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
ஓட்டப்பிடாரம் வ.உ.சி. பள்ளி மாணவர்களுக்கு கணக்குப் பதிவியல் பயிற்சி!
வியாழன் 17, நவம்பர் 2022 5:49:00 PM (IST)

ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் கணக்குப் பதிவியல் - தணிக்கையியல் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஓட்டப்பிடாரம் கிளையில் 5 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. கிளை மேலாளர் பழனீஸ்வரன் தலைமையில் வங்கி பணியாளர்கள் இப்பயிற்சியினை அளித்தனர்.
பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா பயிற்சி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கு ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் மேரி தலைமையில் தொழிற்கல்வி ஆசிரியர் கள்ளாண்டபெருமாள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் மகேஷ் பிரிவின் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கீதா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
சனி 4, பிப்ரவரி 2023 4:25:03 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இரத்த தான முகாம்
வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:30:59 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்க ராஜ்ஜிய புரஷ்கார் தேர்வு முகாம்
வியாழன் 2, பிப்ரவரி 2023 12:06:42 PM (IST)
_1674889708.jpg)
கோவில்பட்டியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி
சனி 28, ஜனவரி 2023 12:38:35 PM (IST)

அனைவருக்கும் நாட்டுப்பற்று அவசியம்: குடியரசு தினவிழாவில் தொழிலதிபர் நெகிழ்ச்சி!
வெள்ளி 27, ஜனவரி 2023 3:31:39 PM (IST)

குளத்தூர் டி. எம். எம் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு
வெள்ளி 27, ஜனவரி 2023 3:26:22 PM (IST)
